follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉள்நாடுபேராதனை பல்கலைக்கழக மோதல் : மூன்று மாணவர்கள் கைது

பேராதனை பல்கலைக்கழக மோதல் : மூன்று மாணவர்கள் கைது

Published on

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் கடந்த வாரம் (14) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் குழுவினால் சட்டப் பட்டதாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மாணவர்கள் இன்று பேராதனை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கலைப் பீடத்தின் 4ஆம் வருட மாணவர்களான 24 வயதுடைய தலேலிய, அம்பலாங்கொடை மற்றும் துன்மோதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...