follow the truth

follow the truth

May, 1, 2025
Homeவிளையாட்டுஇந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

Published on

14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது.

மே மாதம் 2ஆம் திகதி 29 போட்டிகள் நிறைவடைந்ததிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை கொவிட்-19 பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு இன்று தொடர் மீள ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகின்ற இந்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

எஞ்சிய 27 லீக் போட்டிகள் உட்பட மொத்தமாக 31 போட்டிகள் டுபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...