கசினோ வர்த்தகத்திற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டத்தை தயாரிப்பதை மேற்பார்வையிட உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன தலைமையிலான இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, எம்.ஏ.சுமந்திரன், மயந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 5ஆம் திகதி கூடிய நிதிக்குழுவில் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.