follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉலகம்ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

Published on

ஜப்பானிய கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மர்மமான கோளப் பொருளை கடற்கரைக்கு வந்த சில நகரவாசிகள் முதலில் பார்த்தனர். இதுகுறித்து பேரூராட்சி மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நகர அதிகாரிகள் கடற்கரையை பாதுகாப்பான வலயமாக நியமித்து, காவல்துறை மற்றும் இராணுவத்தை நிலை நிறுத்தினார்கள்.

இது கடலில் வைக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. எனினும், அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என வலியுறுத்தப்பட்டது.

பின்னர் ஜப்பானிய ஊடகங்கள், கோளப் பொருளின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை X-கதிர்கள் பயன்படுத்தியதாகவும், கோளப் பொருளுக்குள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.

கோளப் பொருளுக்கு இரண்டு ‘வடிவங்கள்’ இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இது ஏதோவொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் பின்னர் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்

மாநிலங்​களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்யப்​ போகிறேன்’ என்று மக்​கள்...

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார். பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ...

ராஜஸ்தானில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் பலி

இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய...