follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடு"பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவு அளியுங்கள்"

“பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவு அளியுங்கள்”

Published on

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குமாறு உலகத் தலைவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இக்கட்டான காலங்களில் இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் ஆதரவற்ற மற்றும் வறிய மக்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கு, அதன் நோக்கத்திற்கு நேர்மையான அரசாங்கக் கட்சியும், குறுகிய அரசியல் இலக்குகளுக்கு அப்பால் சிந்திக்கும் முற்போக்கான எதிர்க்கட்சியும் இருப்பது முக்கியம் எனவும், தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா போன்ற உண்மையான நேர்மையான தலைவர்கள் அநியாயமாக பலவிதமான தண்டனைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும், அது இயல்பு என்றும், நீதியை அரசியலாக்குவதே இதற்குக் காரணம் என்றும், அனைத்தையும் அமைதியாக தாங்கும் தலைவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...

மின்சாரம் சட்டமூலம் – குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள் சில தொடர்பில் இணக்கம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற...