follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஅழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

அழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

Published on

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதற்கமைய, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்போது மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி போன்ற சமகாலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் வழிமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்கிக் குடியியல் வழக்குக் கோவை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...