ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் 13 பேர் பலி

309

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை​ 13 ஆக அதிகரித்துள்ளதுடன், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here