அமெரிக்காவிற்கு வருவோர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்படவுள்ளது.
மே மாதம் 12ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுக்காலமாக இருந்த இந்த முடிவை தற்போது முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.