follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுகளனிவெளி ரயில் சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு

களனிவெளி ரயில் சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு

Published on

ரயில் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி பாதையின் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவிசாவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நாரஹேன்பிட்டி வரை ஒரேயொரு ரயில் மாத்திரமே பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ரயில் கொட்டாவ அல்லது ஹோமாகம நிலையங்களில் இருந்து அவிசாவளை வரை இயக்கப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த ரயில் பேஸ்லைன் வீதி மற்றும் கோட்டே வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை 4 மணியளவில் தடம் புரண்டது.

இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர்...

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...