follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுமுட்டை இறக்குமதி டிசம்பர் வரை மட்டுமே

முட்டை இறக்குமதி டிசம்பர் வரை மட்டுமே

Published on

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அளவு முட்டைகளை ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் முட்டைகள் உபரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு முட்டை மற்றும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும் குறைந்த அளவு அரிசி மற்றும் முட்டையே ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சந்தையில் கொள்வனவு செய்பவர்களை பாதுகாக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...

மின்சாரம் சட்டமூலம் – குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள் சில தொடர்பில் இணக்கம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற...