கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சிறைக் கைதிகள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை கட்டுப்பாட்டுப் பிரிவின் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், ஒரு கைதிக்கு மூன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு நபருக்கு ஒரு உணவுப் பொட்டலம் மற்றும் இனிப்புகள் மட்டுமே கொண்டு வருமாறு அவர் மேலும் அறிவித்துள்ளார்.