follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பரவும் பறவைக் காய்ச்சல்

ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பரவும் பறவைக் காய்ச்சல்

Published on

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக விலங்குகளின் சுகாதாரம் தொடர்பான உலக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் குறித்த வைரஸ் வேகமாக பரவும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு பண்னைகளில் பறவைக்காய்ச்சலுடன் கூடிய விலங்குகள் அடையாளம் காணப்படுகின்றன. குறித்த நிலை இதற்கு முன்னரும் ஏற்பட்ட நிலையில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன.

அத்துடன் கால்நடை சார்ந்த வர்த்தகங்களிலும் கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டன. பறவைகளில் அடையாளம் காணப்படும் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சீனாவில் பறவைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 21 பேர் இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை தென்கொரியாவிலும் பறவைக்காய்ச்சலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசிய வலய நாடுகளில் இந்த நோய் வேகமாக பரவும் தன்மையை அடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...