follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்பெலாரஸ் மீது தடைகளை விதிக்க நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றியம்

பெலாரஸ் மீது தடைகளை விதிக்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம்

Published on

பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய காரணத்திற்காகவும் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் தன் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை நோக்கி இட்டுச்செல்வதாகவும் ஐரோப்பிய ஒன்றிய முன்னணி இராஜதந்திரியான ஜோசெப் பொரல்டி கூறினார்.

இருப்பினும் இதனை பெலாரஸ் மறுக்கின்ற வேளை கடந்த திங்கட்கிழமை போலந்து துருப்பினரால் எல்லை கடவை ஒன்றில் வைத்து நூற்றுக்கணக்கான குடியேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டும் எல்லை முள்வேலிக்கு முன்னால் குடியேறிகள் வீதி ஒன்றில் அமர்ந்திருப்பதும் மறுபக்கம் போலந்து படையினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காட்டுகின்றன.

போலந்து படைகளுக்கும் பெலாரஸ் படைகளுக்கு நடுவே சிக்கியிருக்கும் இந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் முன்னேறிச் செல்வதை போலந்து தடுக்கும் நிலையில் பின்வாங்குவதை பெலாரஸ் தடுப்பதாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...