தேஷபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது பதவியை பொலிஸ் தலைமையகத்தில் ஏற்றுக்கொண்டார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் அண்மையில் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 நவம்பர் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷபந்து தென்னகோனை 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்தார்.
அதன்படி, அவர் இதுவரை அந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேஷபந்து தென்னகோன் 1998 பெப்ரவரி 23 இல் இலங்கை காவல்துறையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தார்.