follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1தேஷபந்து தென்னகோன் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார்

தேஷபந்து தென்னகோன் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார்

Published on

தேஷபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது பதவியை பொலிஸ் தலைமையகத்தில் ஏற்றுக்கொண்டார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் அண்மையில் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 நவம்பர் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷபந்து தென்னகோனை 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்தார்.

அதன்படி, அவர் இதுவரை அந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேஷபந்து தென்னகோன் 1998 பெப்ரவரி 23 இல் இலங்கை காவல்துறையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...