ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
காயத்திற்கு மருந்து அடிக்கும் போது வலி ஏற்படுவதாக தெரிவித்த ருவான் விஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் காயத்தை ஆற்றும் மருந்தை தடவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பொருளாதாரம் மீளும் போது மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் குளியாபிட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.