follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

Published on

ஒருகொடவத்தை இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2900 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

16 மாத காலத்திற்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாகன தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் ரோபோ தொழில்நுட்பம், திரவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் பொதுவான தேவைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...