follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

Published on

ஒருகொடவத்தை இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2900 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

16 மாத காலத்திற்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாகன தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் ரோபோ தொழில்நுட்பம், திரவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் பொதுவான தேவைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...