follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்

Published on

ஒருகொடவத்தை இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2900 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

16 மாத காலத்திற்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாகன தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் ரோபோ தொழில்நுட்பம், திரவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் பொதுவான தேவைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...