சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா

229

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் லீ சி யென்னும் அடுத்த மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் நாட்டுக்கு புதிய பிரதமர் பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இராஜினாமா அறிவிப்புக்கு சிங்கப்பூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here