follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1பெலியத்த ஐவர் படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியாவில் கைது?

பெலியத்த ஐவர் படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியாவில் கைது?

Published on

எமது ஜன பல கட்சியின் செயலாளர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் ‘டபள் கெப் சூட்டி’ என அழைக்கப்படும் நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது அவரது சகாக்கள் இருவருடன் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என இந்திய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘டபள் கெப் சூட்டி’, கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் சகா என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...