follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

Published on

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

“.. வாகன இறக்குமதி இப்போது அத்தியவசியமாகியுள்ளது. 4-5 வருடங்களாக வாகன இறக்குமதி இல்லாமல் எமது துறை கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது..

நாங்களும் வாகன இறக்குமதியை விரும்புகிறோம்.

இந்த ஆண்டு பேருந்துகள் மற்றும் லாரிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு எஞ்சிய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர நாங்களும் பிராத்திக்கிறோம்.

தற்போது எந்த வாகனத்தையும் கொண்டு வர அரசு தீர்மானிக்கவில்லை. புதிய அரசாங்கம் இந்த முடிவை மாற்றுமா என்று கூற முடியாது.

தங்கள் வாகனங்களை இப்போதைக்கு விற்பதற்கு யாரும் அவசரப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

வாகனங்கள் எப்போது வழங்கப்படும் என்பதை அரசில் இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. இது குறித்து அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் மக்கள் அதனை எதிர்பார்த்து நிற்கிறார்கள். அரசு அறிவிக்கும் வரை யாரும் தங்கள் வாகனத்தை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...