follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - ஆனந்த விஜேபால

தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஆனந்த விஜேபால

Published on

தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்தும் கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தின சம்பவத்தினை அரசு கடும் அவதானத்தினை செலுத்தியுள்ளது. இது குறித்த தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் மகரகம பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட சமிந்து டில்ஷான் மதுஷங்க கந்தனல் ஆராச்சி என்பவர் பாலவி பிரதேசத்தில் வைத்து மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சந்தேக நபராக பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்களே..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...