follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 6 இளைஞர்கள் கைது

11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 6 இளைஞர்கள் கைது

Published on

11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர்கள் இந்த சிறுமியை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை மது அருந்தவும் பழக்கப்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...