follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

தேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

Published on

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்பிறப்பாக்கிகள் குறித்த நிறுவனங்களிடம் உள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரிலுள்ள 10 இடங்களில் மாத்திரம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மின்சார நெருக்கடி, வழமைக்கு திரும்பும் வரை குறித்த மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...