follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுசந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் - பொலிஸ்

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் – பொலிஸ்

Published on

பாணந்துறை ஆதார மருத்துவனைக்கு முன்பாக அம்பியூலன்ஸ் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த இருவரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு பொலிஸ் ஊடகப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு சந்தேக நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட இலக்கங்களை வழங்கியுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண குற்றப் பிரிவு – 071-8592686
பணிப்பாளர், களுத்துறை குற்றப் பிரிவு – 071-8592745

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...