follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள்

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள்

Published on

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 10 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷியா. அதே நேரம் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.

விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷியாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.

இதேபோல், உக்ரைன் மீதான ரஷிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...