follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுமத்தளவிற்கு விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள Wizz Air நிறுவனம்

மத்தளவிற்கு விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள Wizz Air நிறுவனம்

Published on

மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் (Wizz Air ) விமான சேவை நிறுவனமே அதற்கான இணக்கத்தை வழங்கியுள்ளது.

அபுதாபியில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் முதலாம் திகதி விமானப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் நிலையான நேரஅட்டவணையின் கீழ், குறித்த விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தருமென இராஜாங்க அமைச்சர் ஏ.ச்சானக்க தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் தற்காலிக சேவைகளாகவே மத்தள விமான நிலையத்திற்கான விமான சேவைகள் இடம்பெற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...