follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

Published on

கடந்த பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு மற்றும் காணி அபிவிருத்தி ஆகிய சட்டமூலங்கள் இவ்வாறு சட்டமாக்கப்பட்டு இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டங்கள் நேற்று முதல் சட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தரவுத்தள வழங்குநர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு அதனை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் தரவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டத்தின் ஊடாக 550,000 ரூபாவாக காணப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு தொகை 20 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.அது தற்போது பணிக்கும் செல்லும் போது அல்லது திரும்பும் போது ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...