follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகாலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Published on

கொழும்பு –  காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காலி முகத்திடலில் குவிந்துள்ள சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைச் சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களை பாதுகாத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை  கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தபால் ஊழியர்களும் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...