follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுவன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

வன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

Published on

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 43 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் மேலும் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள 791 முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், மேல் மாகாண பொலிஸ் நிலையங்கலுக்கே கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 444 என தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...