follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு நிவாரண பொருட்கள் - கொடியசைத்து அனுப்பி வைத்த தமிழக முதல்வர்

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் – கொடியசைத்து அனுப்பி வைத்த தமிழக முதல்வர்

Published on

கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்புகிறது.

இதன் முதல் கட்டமாக கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதற்கு முன் வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 தொன் பால்மா பொருட்கள் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் ஆவின் பால் மா பவுடர் மற்றும் 24 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு சரக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் 22ஆம் திகதியன்று இரண்டாவது கட்டமாக இலங்கைக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...