follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுநிலக்கரி விலை அதிகரிப்பால் இலங்கைக்கு பாதகமான நிலைமை

நிலக்கரி விலை அதிகரிப்பால் இலங்கைக்கு பாதகமான நிலைமை

Published on

உலக சந்தையில் நிலக்கரியின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அவர், எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வருடத்துக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 33 நிலக்கரி கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலக சந்தையில் அதீதமாக அதிகரித்துள்ள நிலக்கரியின் விலை எதிர்காலத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...