follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1பொருளாதார நெருக்கடி - தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்

பொருளாதார நெருக்கடி – தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்

Published on

நாட்டில் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவினங்களை மட்டுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தவிர, ஏனைய அத்தியாவசியமற்ற செலவுகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு நிதி அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என மற்றுமொரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...