follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுஐந்து நாட்களாக காணாமல்போன பெண் கொலை? சந்தேகநபர் வாக்குமூலம்

ஐந்து நாட்களாக காணாமல்போன பெண் கொலை? சந்தேகநபர் வாக்குமூலம்

Published on

கம்பளையில் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கம்பளை, எல்பிட்டிய வெலிகல்ல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கெலிஓயா நகரில் அமைந்துள்ள தான் பணியாற்றும் மருந்தகம் இடத்துக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து சென்ற யுவதியொருவர் காணாமல்போயுள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும் வீட்டிலிருந்து சுமார் (100 மீற்றர்) தூரத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் குறித்த பெண் செல்வது பதிவாகியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...