follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுமேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பம்

மேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பம்

Published on

மேற்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணிகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது, மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார்.

மேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் 2016 இல் தயாரிக்கப்பட்டது. இது சிங்கப்பூர் நகர வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் இந்த மாவட்டங்கள் பொருளாதார, வணிக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.

இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு இந்த அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்தி, அதன் இறுதி மீளாய்வை அடுத்த மாதத்திற்குள் விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...