follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுமார்லன் சாமுவேல்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி

மார்லன் சாமுவேல்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி

Published on

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் தொடர்பான நான்கு குற்றங்களை செய்துள்ளமையை ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற T10 தொடரின் போது மார்லன் சாமுவேல்ஸ் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த தொடரில் ஒரு போட்டியிலும் சாமுவேல்ஸ் விளையாடியிருக்கவில்லை. இந்தநிலையில் குறித்த தொடரின் போது நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விதிமுறையை மீறி பரிசுப்பொருட்களை பெற்றமை, பணத்தை பெற்றுக்கொண்ட விடயத்தை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் அறிவிக்காமை மற்றும் இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமை போன்ற நான்கு குற்றச்சாட்டுகள் கடந்த 2021ஆம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டது. அதன்படி இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்டதில் மார்லன் சாமுவேல்ஸ் நான்கு குற்றங்களையும் செய்துள்ளமையை சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

மார்லன் சாமுவேல்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் அவருக்கான தண்டனை தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்த சாமுவேல்ஸ் 71 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 67 T20i போட்டிகளில் விளையாடி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...