follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

இலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

Published on

கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களுக்கு மிகவும் நம்பகமான செய்தி வழங்குநராக மாறியுள்ளது.

எமன், ஈராக், சோமாலியா, லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம் பெற்ற உள்நாட்டு போர் மற்றும் மோதல்களை உடனுக்கு உடன் களத்தில் இருந்து தகவல்களை A24 செய்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

“A24 செய்தி நிறுவனம் இலங்கையின் தனியார் மற்றும் அரச துறை சார்ந்த முக்கிய செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இலங்கையில் எமது சேவையை எதிர்வரும் இரண்டாவது காலாண்டில் மேலும் விரிவுபடுத்த அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

”எங்களது செய்திகள் சமகால விவகாரங்கள், மனிதாபிமான, பொருளாதார மற்றும் சமூக செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என A24 செய்தி நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெயனி சமரக்கொடி தெரிவித்துள்ளார்.”

”மேலும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய செய்தி வழங்குநர்களில் ஒன்றாக எங்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். பல பிரபலமான ஊடகங்களுடனான சிறந்த ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என A24 செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல் அஜ்லோனி தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...