follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான சில்லறை விலை நீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான சில்லறை விலை நீக்கம்

Published on

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச நிர்ணய விலை நேற்றிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கான 65 ரூபா விசேட வர்த்தக வரி அடுத்த 6 மாதங்களுக்கு 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...