follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1சுவர்க்கம் செல்ல இருந்த 30 பேர் அடையாளம்

சுவர்க்கம் செல்ல இருந்த 30 பேர் அடையாளம்

Published on

சுவர்க்கம் செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரசார கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தொடங்கப்பட்ட விசாரணையின்படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுதோடு, இந்த குழுவில் பொதுமக்கள் உள்ளிட்ட சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேர் தீவிரவாதக் கருத்துக்களை பரப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...