follow the truth

follow the truth

June, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

பொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

இதன்படி, இணைந்து வேட்பாளரை முன்வைத்து நாட்டை வங்குரோத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவின் ஊடாக நாட்டு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கும் திறனைப் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது மற்றும் கட்சியின் கருத்து அடுத்தவாரம் அறிவிக்கப்படும் எனவும், ராஜபக்சக்களுடன் இணைந்துள்ள எந்தவொரு முகாமுக்கும் தனது மற்றும் கட்சியின் ஆதரவைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது அவரை ஜனாதிபதியாக வைத்திருக்கும் நபர்களை பொறுத்தே தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...