follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம்

வீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம்

Published on

தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிக்கான உரிமை இருக்கின்றது. இளைஞர் சமூகத்திற்காக பயிரிடப்படாத காணிகளை வழங்கி, அவர்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அனைத்து இடங்களிலும் வீடமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பிரச்சினை காணப்படுகின்றது. எனவே முறையான அடிப்படையில் நகரமயமாக்கல் திட்டத்திற்கு செல்வோம். நீரில்லாத பிரதேசங்களுக்கு நீர் விநியோகத் திட்டங்களை முன்னெடுப்போம். நீர் மக்களின் மனித உரிமைகளில் ஒன்று என்பதால் அதனை நாம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 41 ஆவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 09 திகதி கண்டியில் மிக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம். இந்த அரசாங்கமும், தற்போதைய பதில் ஜனாதிபதியின் ஆட்சியிலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட அக்கறையற்ற தீர்மானங்களால் வறுமை அதிகரித்து காணப்படுகின்றது. ஏழைகள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்ப்பதில்லை.

எனவே கெமிதிரிய, அஸ்வெசும, ஜனசவிய, சமுர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி, வறுமையை ஒழிக்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுத்து, 24 மாதங்களுக்கு மாதாந்தம் 20 000 ரூபா வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் தலதா மாளிகையில் பிக்குகளுக்கே வழங்கினோம். வங்குரோத்தடைந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புகின்ற பயணத்திற்கு பிக்குகளோடு, மக்களையும் சேர்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்திருக்கிறது. எமது நாடு பல அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளது.

இன, மத, குல, வகுப்பு, கட்சி வேதங்கள் இன்றி இந்த அனர்த்தங்களை எதிர்கொண்டு அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்களை தவிர 220 இலட்சம் மக்கள சகித்துக் கொள்ள முடியாத அளவில் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த துன்பத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பது தமது பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...