follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மற்றும் தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்திலும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 500 இற்கும் அதிகமான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய தொற்றுநோய்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, 35 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தடுக்கப்படக்கூடிய நோயாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...