follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுகடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது

Published on

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதனை டிசம்பர் 31ஆம் திகதி அளவில் முடிவுறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கைக்கான யோசனைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தை இன்று (05) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் இதனை வெளியிட்டார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தாமதமடைவதனால் மாத்திரம் மேலதிக பற்றாக்குறை வட்டியாக 1.7 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர் ;
தாங்கிக் கொள்ள முடியாத கடன் சுமைக்குள் நாம் சிக்கியுள்ளோம்.
உண்மையில் வாங்கிய கடனில் இருந்து பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், அதன் பலனை இப்போது அனுபவித்திருக்க வேண்டும். இதுவரை காலமும் வாங்கிய கடனை அவ்வாறே நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு பயன்படுத்தாமையினால் தான், அக்கடனில் வட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

“இடைக்கால நிலையான கணக்கின் முதல் நான்கு மாதங்களுக்கு 1000 பில்லியன் ரூபா தொடர்ச்சியான செலவுகள் (வாடகை தவிர)1,000 பில்லியன் ரூபாய்களும், மூலதனச் செலவுகளுக்காக 425 பில்லியன் ரூபாய்களும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு மேலதிகமாக ஏனைய கடன் சேவை முறைகளுக்கு 1, 175 பில்லியன் ரூபாய்களும் அவசியம்.

அதன்படி மொத்த மதிப்பீடு 2,600 பில்லியன் ரூபாய்களாகும்.
அரசாங்கத்தின் வருமான மதிப்பீடு 1,600 பில்லியன் ரூபாய்கள் எனவும் அடிப்படைக் கடன் பெற்றுக் கொள்வதற்கான வரையறை 1,000 பில்லியன் ரூபாய்கள் ” என்றும் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ மேலும் தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3,649 டெங்கு நோயாளர்கள் மற்றும் 02 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு...

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் , முன்னாள் பிரதித் அமைச்சரும் தமிழ் மக்கள்...

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம்

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை...