follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Published on

மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று முன்தினம் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் பின்னதிர்வுகளால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்ததுடன், 3,400 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மியன்மாரின் நே பேய் தாவ பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. நில அதிர்வினால் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், நில அதிர்வினால் பாரியளவில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தின் பெங்கொக் பகுதியில் இடிபாடுகளுக்குள் சுமார் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...