follow the truth

follow the truth

May, 8, 2025
Homeஉலகம்அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளது - பிரதமர்

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளது – பிரதமர்

Published on

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இந்த புத்தாண்டில் உறுதிகொள்வோம்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுத்து கடந்த ஆண்டில் இலங்கை எதிர்நோக்கிய சவால்கள் பலவாகும்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் பாதுகாப்பிற்காகவே கடந்த ஆண்டில் முன்னுரிமை வழங்கியிருந்தோம்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தியதன் ஊடாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை எமக்கு பாதுகாக்க முடிந்தது.

தொற்று நிலைமைக்கு மத்தியிலும் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் இடைநிறுத்தாது, மக்களின் வாழ்க்கை நிலையைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி ஒளியை முழு நாட்டிற்கும் பரப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலட்சியமாகும்.

அதற்காக சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக எம்மத்தியில் காணப்படும் பல்வேறு தடைகளை முறியடிக்க வேண்டும்.

ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சரியானதை தெரிவுசெய்து அதற்காக செயற்படுவதன் ஊடாக தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.

அதற்காக அனைவரும் எதிர்பார்க்கும் புதிய பாதை இன்று உதயமாகும் புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும்.

அனைவரும் ஒன்றிணைந்து தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக இப்புத்தாண்டை உருவாக்குவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மலர்ந்துள்ள 2022ம் ஆண்டு அனைவருக்கும் வளமானதும், ஆரோக்கியமானதுமான ஆண்டாக அமைய வேண்டும் என சூரியன் செய்திப் பிரிவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...