follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

Published on

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தலைமையில் வலுசக்தி அலுவல்களுக்கான உபகுழுவொன்றை நியமிக்க நேற்று (17) தீர்மானிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் நேற்றையதினம்(17) பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

வலுசக்தித் துறை தொடர்பில் அனுபவம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவின் தலைமைத்துவத்தின் கீழான இந்த உபகுழுவின் ஊடாக இந்நாட்டின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைகளில் எரிசக்தி துறையில் எதிர்காலத்தில் நேர்மறையான நடவடிக்கைகளை
எடுப்பதற்குத் தேவையான பிரச்சினைகள் குறித்து விவாதித்து தேவையான பரிந்துரைகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவைர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ருவன்வெல்ல பகுதியில் போக்குவரத்து மட்டு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர இன்று (19) இரவு 10...

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும்...

விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவதற்கு எதிராக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை...