follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1தெஹிவளை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் சுட்டுக்கொலை

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் சுட்டுக்கொலை

Published on

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு நபரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இன்று (25) அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.30 மணியளவில், கஹதுடுவ பகுதியில் பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டை விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டுள்ளனர். அந்த நேரத்தில், அங்கு ஒளிந்திருந்த சந்தேகநபர், படையினர்மீது துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுத்த விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர், தற்போது களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...