follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் வெளிநாட்டவர் கைது

சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் வெளிநாட்டவர் கைது

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) காலை, சுமார் ரூ.400 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருட்களுடன் ஒரு 52 வயதுடைய கனடா பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இந்த கைது இடம்பெற்றது.

சந்தேகநபர் ஒன்ராறியோ, கனடா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், கனடாவிலிருந்து கட்டார் எயார்வேயின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு பயணம் செய்துள்ளார். விமான நிலையத்தில் அவரது பயணப் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 12.196 கிலோ ஹஷீஷ், 5.298 கிலோ கொக்கேய்ன் என மொத்தம் 17.494 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...