follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1IMF இனது ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

IMF இனது ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

Published on

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார்.

நேற்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்துள்ள போதும், உலகளாவிய சந்தை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தாக்கம் அளிக்கக்கூடும்” எனக் கூறினார்.

இவ்வாறான ஆபத்துகள் மற்றும் சூழ்நிலைகளை ஐந்தாவது மதிப்பாய்வின் போது மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உலக சந்தை நிலைமை, கொள்கை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்களை உள்ளடக்கிய முழுமையான பொருளாதார மதிப்பீடு இந்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

கடந்த நான்காவது மதிப்பாய்வின் சுருக்கம்:
2025 ஜூலை 1 ஆம் தேதி, ஐஎம்எப்பின் நிர்வாகக் குழு நான்காவது மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இதன் மூலம் இலங்கைக்கு அமெரிக்க டொலர் 350 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதுவரை இலங்கை பெற்றுள்ள மொத்த நிதி உதவி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

ஜூலி கோசெக் மேலும் கூறுகையில், பணவீக்கம் குறைந்துள்ளது, வருவாய் வசூல் மேம்பட்டுள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது, என இவை பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள் எனக் கூறினார்.

அத்துடன், 2022 ஆம் ஆண்டில் -8.2% என இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீதம், 2024 இல் +13.5% ஆக உயர்ந்துள்ளதாகவும், இது நிதி செயல்திறன் வலுவடைந்ததைக் காட்டுவதாகவும், கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததின் தாக்கமாகவும் அவர் விளக்கினார்.

IMF, இலங்கையின் நெருக்கடிக்குப் பிந்தைய 5% வளர்ச்சி இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...