நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.