follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுஇலங்கை உட்பட 3 நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

இலங்கை உட்பட 3 நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

Published on

தெற்காசிய வலயத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் இலங்கையில் 19 வீதத்தினாலும், இந்தியாவில் 17 வீதத்தினாலும், திமோர்-லெசுடேயில் 32 வீதத்தினாலும் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஓப்பீட்டளவில் இது 20 வீத வீழ்ச்சி எனவும் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...

அடுத்த இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு...