follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Published on

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணினி கட்டமைப்பை வழமைக்கு கொண்டு வரும் வரை தற்காலிகமாக மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படும்.

இதேவேளை, நேற்று முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதி பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.

மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...